May 30, 2010

மொக்கைப் பதிவா? அப்பிடின்னா என்னங்க?

பதிவு ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு. என்ன புது பதிவு ஒண்ணும் காணோமே? என்று ஏகப்பட்ட! புகார். என்ன செய்யலாம்?
இது தான் புதுப் பதிவர்களின் இன்றைய பிரச்னை!



கதை, நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை… இப்படி ஏதாவது எழுதலாமே.?
அப்புறம் புத்தகமெல்லாம் கூட போடலாம்?

அதெல்லாம் ஒண்ணும் தெரியாது..



செய்தி விமர்சனம், பார்த்தது, படித்தது. இப்படி ஏதாவது?

எல்லாரும் முன்னாடியே போட்டுர்றாங்களே?


ஏதாவது சினிமா விமர்சனம்.?
அரைத்த மாவையே அரைக்கிறார்கள். இசை இம்சை. ஒளிப்பதிவு ஒப்பேறவில்லை. இப்படி ஏதாவது எழுத வேண்டியதுதானே?

சினிமாவெல்லாம் பாக்குறது இல்ல.


அழகு, ஆரோக்கிய குறிப்பு, சமையல் குறிப்பு?

ஒரு குறிப்பும் தெரியாது.


பிடித்தது, பிடிக்காதது, ரசித்தது, திட்டியது?

அதைத்தான் எல்லரும் பதிவாகப் போடுகிறார்களே?



எல்லாப் பதிவுக்கும் போய் அனானியாக பின்னூட்டமாவது போடவேண்டியது தானே

ஆட்டோ அனுப்பிட்டா?


ஏதாவது மொக்கைப் பதிவாவது போடவேண்டியதுதானே?
அப்புறம் புத்தகமெல்லாம் கூட போடலாம்?


மொக்கைப் பதிவா? அப்பிடின்னா என்னங்க?