Showing posts with label சுய தம்பட்டம். Show all posts
Showing posts with label சுய தம்பட்டம். Show all posts

Jun 9, 2009

சும்மா ஒரு பந்தாவுக்கு! : கேள்வி – பதில்

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
‘மெனக்கெட்டு’ எதையும் செய்தால் தான் அது வெற்றி பெறும். எனக்கு பிடித்த / உற்சாகத்தைத் தரும் பெயர்.

2) கடைசியா அழுதது எப்போது?
ஞாபகம் இல்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
மிகவும் பிடிக்கும். பொறுமையாக எழுதினால் நன்றாகவே இருக்கும்

4) பிடித்த மதிய உணவு?
தயிர் சாதம். ஊறுகாய்

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இல்லை. அவர்களாக வரட்டுமே என் நட்பு தேவைப்பட்டால்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
நல்ல தண்ணீர் உள்ள ஏரி அல்லது குளம்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
ஆணா, பெண்ணா என்று சொல்லவில்லையே

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்தது: நான் செய்யும் எல்லாம் தான்.
பிடிக்காதது: செய்வது இல்லை

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடித்தது: மிகுந்த திறமை சாலி
பிடிக்காதது: என்னை விட திறமை சாலி என்று நினத்துக்கொள்வது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
.பலரும் பக்கத்தில் வருகிறார்கள். பலரும் இல்லாமல் போகிறார்கள். எதைக்குறிப்பிட்டு சொல்வது.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
வெளிர் நீல சட்டை
அடர் நீல பேன்ட்!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
டீவி, 70s – 80s இளையராஜா பாடல்கள்

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
நீலம்

14) பிடித்த மணம்?
லாவண்டர், மகிழம்பூ,.சில முகப் பவுடர், சில சோப்

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
டோண்டு சார், :
• பதிவுலகில் ஒரு ஆல்ரவுண்டர் .

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மொக்கை பதிவுகள் தான். பல விஷயங்கள் மொக்கைகளில் இருந்தும் கிடைக்கும்.

17) பிடித்த விளையாட்டு?
குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.

18) கண்ணாடி அணிபவரா?
படிக்கும் போது.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
விட்டலாச்சார்யா!

20) கடைசியாகப் பார்த்த படம்?
மடகாஸ்கர் - எஸ்கேப் 2 ஆப்ரிக்கா.

21) பிடித்த பருவ காலம் எது?
மிதமான கோடை, மிதமான மழை, மிதமான குளிர்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
விக்கிரமாதித்தன் கதைகள்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பழைய படம் போரடித்த நாளில்.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
காதில் கேட்க போதுமான வால்யூமில் உள்ள சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு கோடியில் உள்ள ஒரு நாடு சுமார் 7100 கிலோமீட்டர்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
எல்லாமே தனித்திறமை தான்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அது அந்தந்த விஷயங்களைப் பொருத்தது

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
தமிழ் நாட்டில் பல இடங்கள்!

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக! இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஷாப்பிங்

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
வாழு. வாழவிடு.

Mar 5, 2009

மஞ்சுவிரட்டு / ஜல்லிக்கட்டு காளையும் நானும்

ஊர் திருவிழா மற்றும் பொங்கல் சமயங்களில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

எவ்வளவோ முயற்சித்தும் பலமுறை கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆண்டுதோறும் நடக்கும். இந்த ஆண்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததால் கிராமத்தினர் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல் படி நடத்த கோர்ட் உத்தரவிட்டது.

இந்த முறை ஊரில் இருந்தேன். தோதாக லீவு வேறு.

இந்த முறை எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஆரம்பிப்பதற்கு வெகு முன்னரே சென்றுவிட்டேன்.

நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்தன.
ஏகப்பட்ட போலிஸ் பாதுகாப்பு வேறு.

ஆரம்பித்து விட்டது. காளைகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.

எதிர்பட்ட அனைவரையும் முட்டிமோதி தள்ளிக்கொண்டு சென்றன.

கூரான கொம்பு, உருண்டு திரண்ட திமில். பார்பதற்கே பயங்கரமாக இருந்தன.
வர்ணனையாளர்கள் பீறிடும் இரத்தத்தையும் வர்ணித்து கொண்டிருந்தார்க்ள்.
தூக்கி வீசப்பட்ட இளைஞர்களை டாக்டர்கள் குழு அவசர சிகிச்சை செய்து கொண்டிருந்தார்கள்.

சிலருக்கு கை காலில் காயம். சிலருக்கு குடல் சரிந்து தூக்கிக்கொண்டு காப்பற்ற ஓடிக்கொண்டிருந்தார்கள்.

காளைகளின் கொம்புகளில் இரத்தம்.

வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண்மணி ஊரில் இதைக் காட்ட வேண்டும் என்று ஆர்வத்துடன் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

ஒரு காளை என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நல்ல கூரிய கொம்பு. சிலுப்பிகொண்டும் உறுமிக்கொண்டும் இருந்தது. அதன் மேல் இரத்தகலராக இருந்தது.

குங்குமத்தை கொட்டியிருக்கிறார்களா? அல்லது யாரையும் முட்டிய இரத்தக்கரையா?

எனக்கு அருகில் வந்தது. என்ன ஒரு பத்து பனிரெண்டு அடி தூரம் இருக்குமா?

ரொம்ப நேரம் சுற்றி வந்தது. இன்னும் நெருங்கட்டும் பார்க்கலாம்.

கொம்பால் தரையை குத்திக் கிழித்தது. புழுதி பறந்தது. காலால் மண்ணை கீறியது. உறுமியது.

"யார் கிட்ட விளையாடுறே. வா ஒரு வழி பண்ணிடறேன்".

இன்னும் கொஞ்சம் அருகில் வந்தது. இப்ப திமிலை அமுக்கிப் பிடித்து ஒரேயடியா மோதி
மடக்கி விடலாம் என்று நினைத்தேன். அப்போ தான் பின்னாலேருந்து ஒருத்தன் துரத்திக்கொண்டு வந்தான். அடச்சே! நேராக ஒடிவிட்டது.

"அடேடே.. அப்புறம்".

அப்புறமென்ன.. எவ்வளவு நேரந்தான் தென்னை மரத்து மேலேயே இருக்கிறது?.
இறங்கி வீட்டுக்கு போயிட்டேன்.